search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம் மெக்கானிக் மர்ம மரணம்"

    ராமேசுவரத்தில் மனைவி மற்றும் உறவினர்கள் மீது புகார் கொடுத்த மெக்கானிக் மர்மமான முறையில் இறந்தார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமதீர்த்தம் வடக்குத்தெருவைச் சேர்ந்த வர் மலைக்கண்ணன் (வயது 40). இருசக்கர வாகன மெக்கானிக்.

    இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு சபரி (16) என்ற மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்துள்ளது.

    இது தொடர்பாக ராமேசுவரம் நகர் போலீசில், மலைக்கண்ணன் புகார் செய்தார். மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தாக்க முயல்வதாக அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வடக்குத் தெரு வில் மலைக்கண்ணன் மர்ம மான முறையில் பிணமாக கிடந்தார்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் ராமேசுவரம் நகர் போலீசார் விரைந்துச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மலைக்கண்ணன் உட் கார்ந்த நிலையில் பிணமாக இருந்ததால் அவர் எப்படி இறந்தார்? என்பதில் மர்மம் நிலவுகிறது.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×